Breaking News

100 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை

    தமிழகத்தில் வரும்கல்வியாண்டில் ( 2020 - 2021 ) 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகதரம் உயர்த்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது .

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக சட்டப்பேரவை யில் விரைவில் வெளியாகவுள்ளது . மாணவ , மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உயர்நிலை , மேல்நிலை கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்து டன் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன . அதன்படி வரும் கல்வியாண் டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த துறை வாரியான மானியக் கோரிக்கைகளை விவாதிக்க வரும் 9 - ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது .

   இதை முன் னிட்டு முன்னதாகவே , பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை நடக்கும் நாளன்று வெளியிடப்படவேண்டிய புதிய அறிவிப்புக ளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது . இதன் ஒரு பகுதியாக வரும் கல்வியாண்டில் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளிகளில் இருந்து உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்ததகுதியானவற்றை பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது .

   இதையடுத்து தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியல் , அவற்றில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் ஆகியவை குறித்த அறிக்கையை திங்கள்கிழமை மாலைக்குள் சமர்ப்பிக்கபள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .


No comments