Breaking News

பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீது இன்று விவாதம்- கல்வியாளர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

   தமிழக சட்டப்பேரவையில் பள் ளிக் கல்வித்துறை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலை யில் , அந்தத் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை கல் வியாளர்கள் , ஆசிரியர்கள் எதிர்நோக்கியுள்ளனர் . தமிழ்நாடு சட்டப்பேர வையில் பள்ளிக் கல்வி , உயர்கல்வி , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வியாழக் கிழமை நடைபெறவுள் ளது .

     இந்த நிலையில் , கல்வித்துறை மானியக் கோரிக் கையில் எதிர்பார்க்கக்கூ டிய அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் , ஆசிரியர் கள் என பல்வேறு தரப்பி னர் கருத்து தெரிவித்துள் ளனர் . பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆசிரியர் பணியிடங்களு டன் , ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப் பட வேண்டும் . அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , உள்ளாட்சிப் பள்ளிகளை ஒரு எல்லை வரையறை செய்து , அருக மைப் பள்ளிகளாக அரசு அறிவிக்க வேண்டும் . உயர் கல்வித் துறையில் கல்லூரி களில் உள்ள காலிப்பணி யிடங்கள் அனைத்தையும் நிரப்பி முழுமையான உயர் கல்வி கிடைப்பதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் .

    தமிழ்நாடு அரசு ஊழியர் கள் ஆசிரியர்கள் நலகூட்ட மைப்பின் தலைவர் சா . அ ருணன் : தனியார் பள்ளி களில் 25 சதவீத இட ஒதுக் கீட்டின் கீழ் ஏழை மாண வர்களுக்கு சேர்க்கை வழங் குவதற்கு பதிலாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் . இதனால் , அனைத்துத் தரப்பு பெற்றோர்களும் தங் கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வ ருவார்கள் என்றார் .

    மேலும் , கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர் கள் , ஆசிரியர்கள் மீது பதி யப்பட்ட வழக்குகள் , மேற் கொள்ளப்பட்ட நடவ டிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத் தியுள்ள து . இதே போல , வரும் கல்வி யாண்டில் பகுதி நேர ஆசிரி யர்களுக்கு ஊதிய உயர்வு , கால முறை ஊதியம் ஆகி யவற்றை பெறுவதற்கான அறிவிப்பை அரசு வெளியி டும் என எதிர்பார்க்கிறோம் எனபகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் செந்தில் தெரிவித்தார் .


No comments