Breaking News

கொரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட எந்த வசதிகள் வழங்காமலும், ஆசிரியர்களின் விருப்பத்தை பெறாமலும் பணியமர்த்தப்படுவதாக அதில் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments