Breaking News

பள்ளிகளில் இலவச பை, பாடப்புத்தகம் ஆக., 3 முதல் வழங்க உத்தரவு

பள்ளிகளில் இலவச பை, பாடப்புத்தகம் ஆக., 3 முதல் வழங்க உத்தரவு
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, பள்ளிகளில் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, இரண்டு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், வரும், 3ம் தேதி முதல், இலவச பாடப் புத்தகங்களையும், புத்தக பைகளையும் வழங்க வேண்டும்.ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதலிலும், பின், இரண்டாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலும், பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தக பைகளை வழங்க வேண்டும். பள்ளி வளாகங்களிலும், நுழைவாயிலிலும் கூட்டம் சேராமல், மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தக வினியோகம் செய்யும், 'கவுன்டர்'களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு, அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் முடிந்த பின், பள்ளிக்கு வரவைத்து, புத்தகம் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments