Breaking News

ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரிப்பது ஏன்?- அறிவியலும், ஆன்மிகமும் சொல்லும் உண்மை

   ஆடி மாதம் என்றாலே திருவிழா மாதமாக பார்க்கப்படுகின்றது. இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட மாதங்களாக ஆடி மாதமும், மார்கழி மாதமும் பார்க்கப்படுகின்றது...
       கிராமங்களில் ஆடி மாதம் முழுவதும் ஒரு புறம் விழா கோலமாக காட்சி அளிப்பதோடு, தங்களின் வாழ்வாதாரம் தொடங்கும் நல்ல மாதமாக அதாவது உழவு தொழிலை தொடங்குவதற்கான காலமாக் அபார்க்கப்படுகின்றது.

திருமணம் கூடாது:

     ஆடி மாதம் முழுவதும் இறைவனை நினைத்து தினமும் வணங்கி வழிபடுவதற்காக, அவரை தவிர வேறு எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்கள் இந்த மாதத்தில் நாம் செய்வதுகிடையாது. இதனால் ஆடி மாதம் மிகவும் மங்களகரமான மாதமாக இருந்தாலும் சுபகாரியங்கள் நடத்தப்படுவதில்லை.

தாம்பத்தியம் வைக்கக் கூடாது?

     அதே சமயம் தம்பதிகள் இறைவனை முழுமதார வழிபடுவதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது எனவும் கூறுகின்றனர். இன்றும் கிராமத்தில் புதுமணத் தம்பதிகள் ஆடி மாதம் தொடங்கியதும் பெண் அவளது பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவது வழக்கமாக உள்ளது.
          அதுமட்டுமல்லாமல் ஆடி மாதத்தில் தம்பதிகள் சேர்ந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அந்த மாதம் பிரசவத்திற்கு ஏற்ற மாதமாக இல்லை என்பதால், திருமணமான பெண்ணை ஆடி மாதத்தில் பெற்றோர்கள் தங்கள் வீட்டிலேயே தங்க வைக்கின்றனர்.

பணம் இல்லை:

அதுமட்டுமில்லாமல் திருமணம் என்றால் சற்று செலவு அதிகரிக்கும். அதனால் உழவு தொழில் முக்கியமான தொழிலாக இருந்த காலத்தில், விவசாயத்திற்கு என்று ஒதுக்கி வைத்திருக்கும் பணத்தை திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு செலவிட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகும்.

No comments