Breaking News

ஏர்டெலில் மூன்று நாட்களுக்கு இலவச டேட்டா!

ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு 1ஜிபி டேட்டா இலவசமாக வழங்குகிறது.


       ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு தற்போது சிறப்பு ஆஃபர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 1ஜிபி கூடுதல் டேட்டா பெற முடியும். பொதுவாக 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா வழங்கப்படும். ஆனால், தற்போது கூடுதலாக 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டு, 4ஜிபி டேட்டாவாக வழங்கப்படுகிறது.



      இந்த ஆஃபர் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இல்லை. சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏர்டெல் தரப்பில் ஆஃபர் மெசேஜ் வரும். அவர்கள் இந்தச் சலுகையைப் பெற முடியும். மேலும், இவ்வாறு வழங்கப்படும் 1ஜிபி கூடுதல் டேட்டா ஆஃபரின் வேலிடிட்டி 3 நாட்கள் ஆகும். எனவே, இந்த ஆஃபர் பெறும் வாடிக்கையாளர்கள் மூன்று நாட்கள் வரையில் 1ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். ஏர்டெலின் இந்த ஆஃபர் ஜியோவின் டேட்டா ஆஃபரை ஒத்துக் காணப்படுகிறது.

       இது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதால், மற்ற வாடிக்கையாளர்கள் 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3ஜிபி டேட்டா மட்டுமே பெற முடியும். மாறாக 4ஜிபி டேட்டா பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 



       ஏர்டெலில் இதே போல் 49 ரூபாய்க்கான ரீசார்ஜ் பேக் உள்ளது. அதில் 38.52 ரூபாய்க்கு டாக் டைம், 100MB டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திலும் 1 ஜிபி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.


No comments