Breaking News

வரலாற்றில் இன்று 10.08.2020

வரலாற்றில் இன்று 10.08.2020
நிகழ்வுகள்

கிமு 612 – அசிரியப் பேரரசன் சின்சரிஷ்கன் கொல்லப்பட்டார்.
610 – முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது.
955 – புனித ரோமப் பேரரசன் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
1519 – மகலனின் ஐந்து கப்பல்கள் உலகைச் சுற்றிவர செவில் நகரில் இருந்து புறப்பட்டன.
1675 – ரோயல் கிறீனிச் வானாய்வகத்துக்கான அடிக்கல் லண்டனில் நாட்டப்பட்டது.
1680 – நியூ மெக்சிகோவில் ஸ்பானிய குடியேறிகளுக்கெதிராக புவெப்லோக்களின் எழுச்சி ஆரம்பமானது.
1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடனான போரில் டச்சுத் தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் என்பவனைச் சிறைப்பிடித்தார்.
1776 – அமெரிக்காவின் விடுதலைப் பிரகடன செய்தி லண்டனைப் போய்ச் சேர்ந்தது.
1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.
1809 – குவிட்டோ (தற்போதய ஈக்குவாடோரின் தலைநகர்) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1821 – மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.
1904 – ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.
1913 – பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் ந்கரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1948 – ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.
1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
2000 – உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது (www.ibiblio.org தரவின் படி).
2003 – யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமனம் புரிந்த முதலாவது மனிதர்.
2006 – திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1894 – வி. வி. கிரி, 4வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 1980)

இறப்புகள்

1790 – பிலிப்பு தெ மெல்லோ, தமிழ் டச்சு அறிஞர் (பி. 1723)
1899 – சி. தியாகர், நல்லூரைச் சேர்ந்த தமிழறிஞர்
1980 – யாஹ்யா கான், பாகிஸ்தான் அதிபர் (பி. 1917)

சிறப்பு நாள்

எக்குவாடோர் – விடுதலை நாள் (1809)

No comments