Breaking News

காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10-ம் வகுப்பு மாணவர்கள் ஃபெயில்?

காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10-ம் வகுப்பு மாணவர்கள் ஃபெயில்?
காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு நடைபெறவிருந்த இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியதாகவும் அதில் காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடவும் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் காலாண்டு. அரையாண்டு தேர்வுக்கு வராத மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலால் தேர்வுக்கு செல்லாத மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

No comments