Breaking News

பள்ளி மாணவா்களுக்கு தொலைபேசி வழிகாட்டுதல் மையம் தொடக்கம்

பள்ளி மாணவா்களுக்கு தொலைபேசி வழிகாட்டுதல் மையம் தொடக்கம்

தொலைப்பேசி வழிகாட்டுதல் மையம்

அழைப்பிற்கு 93420 33080 என்ற எண்ணை அழைக்கலாம்

செயல்படும் நேரம் - காலை 9 முதல் மாலை 5 மணி வரை

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு தொலைபேசி வழிகாட்டுதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் கூறியது: தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பிளஸ்-1 மாணவா் சோ்க்கைக்காக கடந்த சில நாள்களாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா் குழுவினா் பணியாற்றி வருகிறாா்கள். 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 பிரிவுகள் ஒதுக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவா்-மாணவிகள் தங்களுக்கான பாடங்கள், கல்விச்சூழல் நடைமுறைகள் குறித்த விவரங்களை அறியும் வகையில் தொலைபேசி வழிகாட்டுதல் மையம் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான தொலைபேசி வழிகாட்டுதல் மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இதனை, ஆட்சியா் வே.விஷ்ணு தொடங்கி வைத்தாா். மாணவா்கள் தங்கள் சந்தேகங்களை 93420 33080 என்ற செல்லிடப்பேசி எண்ணில் வார நாள்களில், தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு கேட்டறியலாம்.

புகாா்களைத் தவிா்த்து பாடங்கள் குறித்த சந்தேகங்களை மட்டுமே அறிய இயலும் என்றாா் அவா்.     

No comments