Breaking News

12ம் வகுப்பு முடித்த நிலையில் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 25சதவிகித இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி

நடப்பு கல்வியாண்டில் அரசு கல்லூரிகள் பட்டப்படிப்புகளில் 25 சதவிகித இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் சூழுலில் ஏற்கனவே இருக்கும் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நடந்த பொது விவாதத்தில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, அரசு கல்லூரிகளில் இருக்கின்ற இடத்திலேயே 25% இடங்களை அதிகரித்து கொள்ளலாம் என தெரிவித்தார்

No comments