Breaking News

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளைத் தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளைத் தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு
தரவரிசைப் பட்டியல் படி, இணையவழியிலோ அல்லது நேரிலோ கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆகஸ்டு 23ஆம் நாள் தொடங்கி செப்டம்பர் மூன்றுக்குள் முடிக்க வேண்டும் என்றும், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிற சான்றிதழ்களைச் சரிபார்த்த பின்னர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மிகப் பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்களுக்கான பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பின்பற்றவும், விதவைகள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தோரின் பிள்ளைகளுக்குச் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.

No comments