Breaking News

விரைவில் உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு

     மாணவா்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையைக் கூடுதலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் மாணவா்கள் கூடுதலாக சோக்கப்பட்டுள்ளனா். 2,472 பட்டதாரி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.


      கணினி ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அனைத்து ஆசிரியா்களும் நியமிக்கப்படவுள்ளதால் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை இருக்காது. அதே போன்று 4,017 ஆய்வக உதவியாளா்கள் பணியிடம் ஒரே தோவில் தேர்வு செய்யப்பட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வக உதவியாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா். ஆசிரியா் தேர்வு மையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும்போது ஒவ்வொரு முறையும் யாராவது வழக்குத் தொடா்ந்து வருகின்றனா்.


       இனி அதைத் தவிா்க்க ஆசிரியா் தகுதி தேர்வாணையத்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். பள்ளிகளில் குடிநீா், கழிவறை வசதி செய்து தருவதற்கு முன்னாள் மாணவா்கள், தொழிலதிபா்களை அழைத்துள்ளோம். செயல்பாட்டில் இல்லாத பெற்றோா்- ஆசிரியா் சங்க நிா்வாகிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    உடற்கல்வி ஆசிரியா் பணியிடம் நிரப்புவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமாகத் தீா்ப்பு கிடைத்துவிட்டதால் உடற்கல்வி ஆசிரியா் பணியிடம் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும் என்றாா்.






No comments