Breaking News

154 நகரங்களில் நடைபெறும் நீட் தேர்வுக்கு மார்ச் 27 முதல் ஹால்டிக்கெட்

    நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக் கான நீட் தேர்வு வரும் மே 3-ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் 1,17,502 பேர் உட்பட நாடு முழுவதும் 15,93,452 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர்,மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் என நாடுமுழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மார்ச் 27-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கலாம்என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு மே 3-ம் தேதியும், தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments