Breaking News

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14-ல் வெளியீடு - தமிழக அரசு அறிவிப்பு

      தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தனித்தேர்வர்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடத்தப்பட்டு, இதற்கான முடிவுகள் 24-ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமான மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவு மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகிறது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments