Breaking News

கல்லூரி தேர்வுகள் ரத்து - தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு-கல்லூரி தேர்வுகள் ரத்து
செ . கு . எண் : 126
நாள் : 23.07.2020 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 
திரு . எடப்பாடி K. பழனிசாமி 
அவர்களின் அறிக்கை- 23.7.2020 

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள் , பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது .

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது . மாணாக்கர்களின் நலன் கருதி , பல்கலைக்கழக மானியக் குழு ( UGC ) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ( AICTE ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி , மதிப்பெண்கள் வழங்கி , - முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் , - முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் , - இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் , அதேபோன்று , எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க நான் உத்தரவிட்டுள்ளேன் . இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் .

கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவிப்பு.

*இறுதியாண்டு இல்லாத மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து.

*கல்லூரிகளில் நடப்பு பருவதேர்வுக்கு மட்டும் விலக்களிக்க அனுமதி.

*யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் - முதலமைச்சர்.

*இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நடப்பு பருவத்தேர்விலிருந்து விலக்கு.*

*முதுகலைப் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்தப் பருவத்திற்கு தேர்வில் இருந்து விலக்கு.

*இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3ஆம் ஆண்டு மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.

*முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.

*எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு.

K. பழனிசாமி 
தமிழ்நாடு முதலமைச்சர் 
வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

No comments