Breaking News

கொரோனோ பாதிப்பு குறையும் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை செங்கோட்டையன்

கொரோனோ பாதிப்பு குறையும் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை செங்கோட்டையன்
கொரோனோ பாதிப்பு குறையும் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை - செங்கோட்டையன். தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு குறையும் வரை பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு அருகே சித்தோடு கன்னிமார்காடு பகுதியில் ஜி.கே.மூப்பனாரின் 90வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 1 லட்சம் விதைகளை விதைக்கும் பணியை அவர் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகள் திறப்பு குறித்து நேற்று ஆலோசனை எதுவும் நடத்தப்படவில்லை என்றார். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் கூறினார்.

No comments