Breaking News

தூங்கும் போது குறட்டையைத் தவிர்க்க பகலில் இந்த விஷயத்தை செய்தால் போதும்

தூங்கும் போது குறட்டையைத் தவிர்க்க பகலில் இந்த விஷயத்தை செய்தால் போதும்
  குறட்டை விட்டுத் தூக்கினால் அவர் ஆழ்ந்து தூங்குகிறார் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது. அவ்வாறு வரும் குறட்டை ஆபத்து என நினைவில் கொள்ளுங்கள். அலட்சியம் காட்டாமல் அதன் காரணத்தை ஆராய்ந்து சரி செய்யுங்கள். சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் குறட்டையைக் கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன."

  குறட்டை விட்டுத் தூக்கினால் அவர் ஆழ்ந்து தூங்குகிறார் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது. அவ்வாறு வரும் குறட்டை ஆபத்து என நினைவில் கொள்ளுங்கள். அலட்சியம் காட்டாமல் அதன் காரணத்தை ஆராய்ந்து சரி செய்யுங்கள். சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் குறட்டையைக் கட்டுப்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  2017 ஆம் ஆண்டு பயோடெக்னாலஜி தேசிய தகவல் மையம் வெளியிட்ட ஆய்வில் பகலில் நீண்ட நேரம் நின்றிருந்தாலோ அல்லது அமர்ந்த இடத்திலேயே கால்களை அசைத்துகொண்டிருந்தாலும் இரவு குறட்டையைத் தவிர்க்கலாம் என கண்டறிந்து வெளியிட்டது.

  இதில் அதிக குறட்டை விடும் 16 பேரை ஆய்வில் உட்படுத்தியுள்ளது. பின் அவர்களின் கால் மூட்டுக்குப் பின் பகுதியில் கெண்டைக் காலில் சுரக்கும் நீரின் அளவை அளவெடுத்துள்ளது. பின் அவர்களை நான்கு மணி நேரம் அமர வைத்துள்ளது. அதில் பாதி பேரை பெடலில் வைத்து கால்களுக்கு அழுத்தம் கொடுக்கச் செய்துள்ளது. மற்றவர்களை அப்படியே அமர வைத்துள்ளது. இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்யச் சொல்லி அவர்களின் தினசரி இரவுக் குறட்டையைக் கண்காணித்துள்ளது. அதில் அமர்ந்தபடி பெடல் செய்தவர்களுக்கு குறட்டை விடுவதன் அளவு குறைந்ததைக் கண்டறிந்துள்ளனர். நாளுக்கு நாள் அவர்களுக்குள் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

  அதாவது முட்டிக்குக் பின் பகுதி கெண்டைக் கால் முதல் கணுக்கால் வரையினால இடத்தில்தான் தொண்டைக்கான காற்று செல்கிறது. இங்கு இரத்த ஓட்டம் சீராக இருந்தால் அதன் மூலம் உடலுக்குள் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து தொண்டையில் ஏற்படும் அழுத்தம் மற்றும் அதிர்வுகளால் உண்டாகும் குறட்டையும் குறைகிறது. எனவேதான் கனுக்கால்களுக்கு அழுத்தம் கொடுக்கச் சொல்கின்றனர்.

  எனவே அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் கால்களுக்கு இந்த பயிற்சியை செய்து பாருங்கள்.

No comments