Breaking News

கல்வி தொலைக்காட்சி பார்க்கும் மாணவர் எண்ணிக்கை மூலம் வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் அமைச்சர் செங்கோட்டையன்

கல்வி தொலைக்காட்சி பார்க்கும் மாணவர் எண்ணிக்கை மூலம் வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் - அமைச்சர் செங்கோட்டையன்
  கல்வி தொலைக்காட்சியை பார்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தன குளத்தில் குடிமராமத்து பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்த அவர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பணிகளை மேற்கொண்டதற்காக நற்சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்கை மற்றும் பள்ளி மாற்று சான்றிதழை வாங்க பணம் கேட்க கூடாது என பதிலளித்தார்.

No comments