Breaking News

பள்ளிகள் இன்று திறப்பு ஒப்புதல் கடிதம் 'ரெடி'

பள்ளிகள் இன்று திறப்பு ஒப்புதல் கடிதம் 'ரெடி'
    பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறுவதற்கான மாதிரி கடிதத்தை பள்ளிக் கல்வித் துறை தயார் செய்துள்ளது.புதுச்சேரியில் இன்று (8ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

  முதல்கட்டமாக, 9ம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்பட உள்ளது.திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் 9, பிளஸ் 1 வகுப்புகளும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் 10, பிளஸ் 2 வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. 

   காலை 10:00 மணிக்கு துவங்கி, மதியம் 1:00 மணி வரை மட்டுமே பள்ளிகள் திறந்திருக்கும்.பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வரும் மாணவர்களை மட்டுமே அனுமதிப்பது என்று பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 

  இதற்காக, பெற்றோர்களின் ஒப்புதலை பெறுவதற்கான மாதிரி கடிதம் தயாராகி விட்டது.பாடங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, எனது சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு எனது மகன் அல்லது மகளை அனுப்பி வைக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்து பெற்றோர் கையெழுத்திடும் வகையில் கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த கடிதம் மாணவர்களிடம் வினியோகிக்கப்பட உள்ளது.

No comments