TNPSC கால்நடை மருத்துவர் பணி முடிவு வெளியீடு
  TNPSC கால்நடை மருத்துவர் பணி முடிவு வெளியீடு
  இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
  வெளியிட்ட அறிவிப்பு:கால்நடை பராமரிப்பு பணிக்கான, கால்நடை உதவி மருத்துவர்
  பதவியில், 1,141 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு பிப்., 23ல் எழுத்து தேர்வு
  நடத்தப்பட்டது.
  தேர்வில், 2,015 பேர் பங்கேற்றனர். அவர்களில், 1,942 பேர் தற்காலிக சான்றிதழ்
  சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். 
  தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 28ம் தேதி முதல், நவ., 6 வரை ஆன்லைன் வழியில்
  சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.
  அதேபோல், தொல்லியல் துறை பணி தேர்வு; தமிழக தொழில்நுட்ப துறையில், உதவி
  இன்ஜினியர் பணிக்கான தேர்வு; 'குரூப் ~ 2' நேர்முக தேர்வு மற்றும் டி.இ.ஓ.,
  தேர்வுக்கும் முடிவுகள்வெளியிடப்பட்டுள்ளன.
 

 
 
 
 
 
