Breaking News

பள்ளி மாணவியருக்கு இலவச மொபைல் போன்

பள்ளி மாணவியருக்கு இலவச மொபைல் போன்
'ஆன்லைன்' கல்வி கற்பதற்காக, அரசு பள்ளி மாணவியருக்கு, இலவச மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

இதில், அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலும், 'டிவி' வாயிலாக கல்வி கற்கின்றனர்.'ஆன்லைன்' வகுப்புகளில், அரசு பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், 'இன்னர் வீல்' அமைப்பு சார்பில், சென்னையில் உள்ள, அரசு பள்ளி மாணவியருக்கு, இலவச ஸ்மார்ட் மொபைல் போன் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சைதாப்பேட்டை மற்றும் திருவான்மியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, 9.5 லட்சம் ரூபாய் மதிப்பில், 135 ஸ்மார்ட் மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. இதில், இன்னர் வீல் அமைப்பின் தலைவர் உஷா சரோஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments