Breaking News

மனஅழுத்தத்தை போக்கும் சூப்பரான பயிற்சி ஒரு நாளைக்கு 10 முறை செய்தால் போதும்

மனஅழுத்தத்தை போக்கும் சூப்பரான பயிற்சி.. ஒரு நாளைக்கு 10 முறை செய்தால் போதும்
உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் உள்ளது. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய்.

இதிலிருந்து விடுபட சில எளிய உடற்பயிற்சிகள் கூட உதவிபுரிகின்றது.

தற்போது மனஅழுத்தத்தை போக்கும் சூப்பரான உடற்பயிற்சி ஒன்றை எப்படி செய்வது என பார்ப்போம்.

பயிற்சி

முதலில் இரண்டு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு, பார்வையை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கவும்.

தரையில் உள்ள ஒரு இரும்புப் பட்டையைத் தூக்குவதுபோல கற்பனை செய்துகொள்ளவும்.

இப்போது அதைச் செய்வதற்கு முன்பாக, மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு, மெதுவாக முன்புறமாக வளைந்து இரு உள்ளங்கைகளும் தரையில் படுமாறு செய்யவும்.

இப்போது, மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு, வாயைத் திறந்து "ஆ.ஹா"! என்று சத்தமாகச் சொல்லவும்.

உங்களால் முடிந்தவரை சத்தமாகச் சொல்லவும். இந்தப் பயிற்சியானது உங்களின் முக இறுக்கத்தைக் குறைத்து, முகத்தசைகளுக்கு ஓய்வு அளிக்கின்றது.

பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிய பிறகு, நேராகவும் நிமிர்ந்தும் நின்றுகொண்டு, முதுகை லேசாக பின்புறம் வளைத்து, கைகளை தலைக்கு மேலே தூக்கி, கண்களை மேல்நோக்கிப் பார்த்து, மார்பை நன்றாக விரித்து, விரல்களைத் திறக்கவும்.

சிறந்த பய‌னை‌ப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு 10 முறை இவ்வாறு செய்யவும்.

நன்மைகள்: 

உடலில் உள்ள அனைத்து வலிகளும் பறந்துபோகும்.இது மேலும் கால்கள், முதுகு, தோ‌ள்பட்டை மற்றும் கைகளில் உள்ள விறைப்புத் தன்மை மற்றும் வலியைப் போக்குகிறது. உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி, முதுகெலும்பு மிருதுவாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்கிறது.

No comments