Breaking News

கல்வி மாவட்ட அளவில் தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கவுன்சிலிங் - பள்ளிக் கல்வித் துறை முடிவு???

கல்வி மாவட்ட அளவில் தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கவுன்சிலிங் - பள்ளிக் கல்வித் துறை முடிவு???

நாளை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான பூஜ்ஜிய கவுன்சிலிங் நடைபெறவுள்ள நிலையில் அடுத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கவுன்சிலிங் வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் நடைபெறலாம் என பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பூஜ்ஜிய கலந்தாய்வு
கல்வி மாவட்ட அளவில் பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதனால் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது என்பது கேள்விக் குறியே! இதனால் வெளி மாவட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெற்றால் தங்கள் மாவட்டதிற்குள் செல்லலாம் என்று இருப்பவர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். அவரவர் சொந்த மாவட்டத்திற்குள் செல்ல வாய்ப்பளித்து விட்டு கல்வி மாவட்ட அளவில் பூஜ்ஜய கலந்தாய்வு நடத்தினால் பெரும்பாலோர்க்கு அனுகூலமாக இருக்கும்.

EMIS மூலமாக பணிமூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என தெரிய வருகிறது.

No comments