Breaking News

கொரோனாவுக்கான 3 புதிய அறிகுறிகள்!!!

கொரோனாவுக்கான 3 புதிய அறிகுறிகள்!!!
கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 3 அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி மணம்~சுவை அறியும் திறன் இன்மை, தொண்டை வலி போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நோயாளிக்கு தகுந்தாற்போல் அறிகுறிகளும், நோயின் தாக்கமும் மாறுபடும். கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் இந்த அறிகுறிகள் தெரியும் இவ்வாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments