Breaking News

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிளே ஸ்கூல் கட்டாயம் - தர்மேந்திர பிரதான்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிளே ஸ்கூல் கட்டாயம் - தர்மேந்திர பிரதான்

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பிளே ஸ்கூல் இருப்பது கட்டாயம் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், மாநிலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

No comments